ராமநாதபுரம் அருகே நண்பர்களோடு மது அருந்திய 12ம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி அருகே உள்ள போத்த நதி கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் கடந்த 6 மாதமாக நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதேவேளையில், மாணவனுக்கு அல்சர் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் நண்பர்களோடு சேர்ந்து மாணவன் மீண்டும் மது அருந்தி உள்ளார். அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்த மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மீண்டும் வயிற்றுவலி அதிகமாகியுள்ளது. பின்னர், கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.