விழுப்புரம் : தனியார் பேருந்திலிருந்து இறங்கும் போது பள்ளி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் வானியம்பாளையத்தை சார்ந்த அனிஷ் என்ற 9 ஆம் வகுப்பு மாணவன் வாணியம்பாளையத்திலிருந்து நேற்று காலை விழுப்புரம் பழைய நிலையத்திற்கு சுகம் என்ற தனியார் பேருந்துவில் நண்பர்களுடன் பயணித்துள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்த போது அனிஷ்வுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்துவிலிருந்து இறங்கியுள்ளனர். இதனையடுத்து அனீஷ் இறங்க முற்படும் போது நிலை தடுமாறி விழுந்து பேருந்துவின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.
மாணவன் உயிரிழந்தையடுத்து இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை செய்தனர். விசாரணையில் பள்ளி மாணவன் படியில் நின்றவாறு சென்று கீழே இறங்கியபோது நிலை தடுமாறி டயரில் சிக்கி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பேருந்து வானியம் பாளையம் சென்றபோது சிறுவனின் உறவினர்கள் பேருந்து மீது கற்களை கொண்டு வீசி தாக்கி உடைத்துள்ளனர்.
பேருந்து மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பேருந்து நடத்துனர், ஓட்டுனர், பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
இதனால் பாதிக்கப்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கும் நடத்துனருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் பாதுகாப்பு வழங்க விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.