பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை பள்ளி வளாகத்தில் உச்சி வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சுமார் 1600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலை நடந்தது. இதனால் மற்ற வகுப்புகளுக்கு மதியம் பள்ளிக்கு மாணவ மாணவிகள் வருவார்கள். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
ஆனால் நேற்று செந்துறை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரையும், செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறப்பு படிப்பு பயிற்சிக்காக ரகுநாத், முனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் ஆசிரியர்கள் வரவழைத்தனர்.
ஆனால் 10-ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் வகுப்புகளுக்கு சரிவர வராமலும், பள்ளிக்கு நேற்று காலை காலதாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதனால், ரகுநாத் என்ற ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், செந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதியம் உச்சி வெயிலில் பள்ளி மைதானத்தில் முட்டி போட்டுக் கொண்டே படிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவன் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அலறித் துடித்தான். இதை அங்குள்ள சிலர் ரகசியமாக படம் பிடித்து வாட்ஸ்அப் குரூப்களுக்கு அனுப்ப அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.