ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. கரிக்கல் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ் படியில் ஆபத்தான முறையில் தொங்கியபடி ஒரு மாணவன் வந்துள்ளான்.
இதைக்கண்ட பஸ் டிரைவர் பாலாஜி பஸ்சை நிறுத்திவிட்டு அந்த மாணவனிடம் உள்ளே வரும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவன் டிரைவரை பயணிகள் கண்முன் தகாத வார்த்தையால் திட்டியுள்ளான்.
மேலும் தான் வைத்திருந்த பிளேடால் டிரைவரின் முகத்தை கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் டிரைவரின் முகத்தில் ரத்தம் வழிந்தது. இதைக்கண்ட பயணிகள் கூச்சலிட்டனர்.
மேலும் தப்ப முயன்ற அந்த மாணவனை பிடித்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த மாணவனை பிடித்து விசாரித்தனர்.
அந்த மாணவன் அரசு நிதியுதவி பள்ளியில் பிளஸ் 1 படித்து வருவதும் என தெரியவந்தது. மாணவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த டிரைவர் பாலாஜி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.