விழுப்புரம் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு துறை கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் திருக்கோவிலூரில் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியடைந்தனர்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று காலை செய்தித்துறை சார்பில் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் புகைப்படக் கண்காட்சியினை விழுப்புரம் திரு. காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைக்க இருந்த நிலையில் காலை 8 மணிக்கெல்லாம் மாணவர்களையும் பள்ளி மாணவிகளை இந்த விழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வந்து அமர வைக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல அரசு அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர்.
ஒரு மணி நேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்து திமுகவினர் அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருப்பதாக கூறியதால் ஏமாற்றமடைந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அமைச்சர் அன்றைய தினம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அரசு அதிகாரிகள் அனுமதி வாங்காததே இதற்கு காரணம் என திமுகவினர் கூறினர். அமைச்சர் வராதது குறித்து ஒரு மணி நேரம் கழித்து கூறியது மாணவ மாணவிகள் ஏமாற்றமடைந்ததோடு சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.