மதுரை: பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் குழுவாக மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரின் முக்கிய பேருந்து நிலையமாக பெரியார் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் வருகையால் பேருந்து நிலையம் அளவுக்கதிகமான கூட்டமாக காணப்படும். இந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் பள்ளியில் இருந்து வீடு செல்ல பெரியார் பேருந்து நிலையத்தை வந்துள்ளனர். இரு அணி மாணவர்களுக்கிடையே மிகப்பெரிய கடந்த மூன்று நாட்களாக கருத்துவேறுபாடு இருந்துள்ளது. இரண்டு நாட்களாகவே மாணவிகள் பெரியார் பேருந்து நிலையத்தில் சண்டையிட்டுக் கொள்வது வாடிக்கையாக இருந்துள்ளது. அது இன்று மிகப்பெரிய சண்டையாக மாறி மாணவிகளுக்குள் குடிமைப்பணி சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் மிகவும் வெறுப்போடு சென்றதோடு மட்டுமல்லாமல் இன்றைய சமுதாயம் சீரழிந்து போகிறது என்ற வேதனை அடைந்தனர். மதுரை மாநகர காவல் துறையினர் மற்றும் அரசு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.