Categories: தமிழகம்

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் சிக்கிய நபர்!

காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி. டில்லி ராணியின் கணவர் மேகநாதன்.

மேகநாதன் டில்லி ராணி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அவப்பொழுது பிரிந்து வாழ்வதும் சில மாதங்கள் கழித்து சேர்ந்து வாழ்வதும் என அவர்களுடைய வாழ்க்கை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று டில்லி ராணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள சாலை தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இந்தியன் வங்கி அருகே அவரது கணவர் மேகநாதன் வழிமறித்து வாகனத்தை காலால் எட்டி உதைத்து பெண் காவலர் டில்லி ராணியை நிலை தடுமாறி கீழே விழ செய்துள்ளார்.

தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலர் டில்லி ராணியை வெட்ட ஓட ஓட துரத்தியுள்ளார். உயிருக்கு பயந்த டில்லி ராணி அங்கிருந்து தப்பி ஓடி எதிரே இருந்த இந்தியன் வங்கி ஏடிஎம்மில் தஞ்சமடைய முயற்சி செய்த பொழுது, இடது கையில் சரமாரியாக டில்லி ராணியை மேகநாதன் வெட்டியுள்ளார்.

அங்கிருந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டத்தை பார்த்த மேகநாதன் அங்கு இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவ காஞ்சி போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டில்லி ராணியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் காவலர் டில்லி ராணிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிவ காஞ்சி போலிசார் தப்பி ஓடிய கணவர் மேகநாதனை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற ஏடிஎம் தற்காலிகமாக மூடப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

பட்டபகலில் பொதுமக்கள் கூடி இருந்த இடத்தில் பெண் காவலர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டுள்ள சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.