ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை அறிவாளால் வெட்டி கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்து சென்ற நபர்களை சுற்றி வளைத்து பிடித்த கிராம மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் எட்வின் ஜெரோம் இவரது மனைவி 23 வயதான கமலி ஷில்பா இதே பகுதியில் இன்று தங்களது ஆடுகளை வயல்வெளிகளில் மேய்த்துக் கொண்டிருந்தார்,
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கமலி சில்பாவை அருவாளால் தலையில் வெட்டி அவர் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்த சென்றனர். படுகாயம் அடைந்த கமலி கூச்சலித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தாலி செயினை பருத்தி சென்ற நபர்களை சுற்றி வளைத்தனர்.
அவர்களிடமிருந்து, ஒருவர் தப்பிய நிலையில் மாங்கரை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், கமலிசில்பாவின் தாலி செயினை மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.