Categories: தமிழகம்

திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : நகராட்சி கூட்டத்தில் வந்த போது பட்டப்பகலில் மர்மகும்பல் துணிகரம்!!

நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டியதில் பலத்த காயமடைந்த சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேட்டூர் அடுத்த குள்ள வீரன் பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). இவர் 14- வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளர். இந்நிலையில் இன்று மேட்டூர் நகராட்சியில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனக்கு சொந்தமான காரில் வந்து இறங்கினார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வெங்கடாசலத்தை அறிவாளால் சரமாரியாக வெட்டியது. அங்கிருந்து தப்பி ஓடிய வெங்கடாஜலம் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து கதவை தாழிட்டு கொண்டார்.

அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதை அடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்திற்கு மேட்டூர் டி.எஸ்.பி, சண்முகம் தலைமையில் சென்ற போலீசார் படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் உயர் சிகிச்சைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அதிமுக முன்னாள் நகர செயலாளர் பழனிசாமி மற்றும் அவரது மைத்துனர் மாதேஷ் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் வெங்கடாசலம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நீதிமன்றம் சென்று விடுதலை ஆனார். மேலும் இவர் மீது மேட்டூர் காவல் நிலையத்தில் அடிதடி ,ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதனால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக அரசுக்கு நாள் குறிச்சாச்சு… அறிவாலயத்தை அலற விட்ட மத்திய அமைச்சர்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சட்டம் தன் கடமையை செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.…

14 minutes ago

திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!

திருமலை ஒன் டவுன் காவல் நிலையத்தில் ஜனசேனா திருப்பதி பொறுப்பாளர் கிரண் ராயல் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையும்…

2 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு ஓகே… அப்படியே பல்கலை., பாலியல் விவகாரத்திலும் நடவடிக்கை எடுங்க : அண்ணாமலை அதிரடி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

3 hours ago

எப்ப பார்த்தாலும் நித்யா மேனனை த***ட்டே இருப்பான் : இயக்குநரை ஒருமையில் விளாசிய பிரபலம்!

பிரபல பத்திரிகையாளர் கூறிய கருத்துக்கள் கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக அவன், இவன் என ஒருமையில் இயக்குநரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.…

3 hours ago

விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை…

5 hours ago

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் : பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் கருத்து!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

5 hours ago

This website uses cookies.