தமிழகம்

’காருக்கு இருக்கும் மதிப்பு என் மகனுக்கு இல்லையா?’.. 9 மணிநேரமாக திக் திக்.. கதறும் தாய்!

சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுத்தபோது கார் கவிழ்ந்து கடலுக்குள் விழுந்த நிலையில், 9 மணிநேரமாக ஓட்டுநரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்த கடலோர காவல்படை வீரர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்று இன்று அதிகாலை அங்கு வந்துள்ளது. இந்தக் காரை கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது சகி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரரை ஏற்றிக்கொண்டு, ஓட்டுநர் முகமது சகி காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலை தடுமாறி கடலுக்குள் பாய்ந்து உள்ளது. அப்போது, உடனடியாக காரின் கதவை உடைத்து கடலோர காவல் படை வீரர் தப்பி உள்ளார்.

ஆனால், கடலில் இருந்து வெளியே வந்த காவல் படை வீரர், அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனையடுத்து, அங்கு இருந்த சக கடலோர காவல் படை வீரர்கள், மயங்கிய வீரரை மீட்டு, உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம், கடலில் மூழ்கிய கார் ஓட்டுநர் முகமதி சகியை மீட்கும் பணியும் தொடங்கியது. இந்தப் பணியில் 30க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும், கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ‘அவர உனக்கு தெரியாதா?’.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நடந்து வந்தவருக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கரம்!

ஆனல், கார் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 மணி நேரமாக ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டுநர் முகமது சகியின் தாய் உள்பட உறவினர்கள், மீட்புப்பணி குறித்து போலீசார் உரிய பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.