தமிழகம்

12 ஆண்டுகள்.. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் : முதலமைச்சரை சந்திக்க முடிவு!

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் தற்போது 13,331 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் தற்காலிக ஆசிரியர்களாக நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படியுங்க: பெட்ரோல் பங்கில் நூதன மோசடி.. 3000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி தப்பியோடிய வாகன ஓட்டி!

இந்நிலையில் பல வருடங்களாக தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் இருந்து வரும் சூழலில் தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளதாகவும் அவர்கள் ஒரு புறம் இருந்தாலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று இது குறித்தான கோரிக்கைகளை அரசு அலுவலர்களிடம் அளித்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தி வருகின்றனர். அதன்படி கோவையில் அனைத்து மாவட்டத்திலும் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இது குறித்து பேசிய அவர்கள், அனைத்து தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்று 12 வருடங்களாக நடைபெறாத தகுதி தேர்வு மற்றும் நியமனத் தேர்வு தற்போது நடைபெற்ற நிலையில் 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் ஆனால் 2024ம் ஆண்டு 2768 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று கூறியிருப்பது 10 சதவிகிதம் மட்டுமே எனவும் இது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் நாங்கள் தொகுப்பூதியத்தில் கூட பணி செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் பகுதி நேர ஆசிரியர்களின் தகுதி என்னவென்று கூட நாங்கள் கேட்கவில்லை ஆனால் நாங்கள் தகுதி தேர்வு நியமன தேர்வு போன்ற தேர்வுகளை எழுதி தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் தங்களுக்கு பணிகளை வழங்கவில்லை என தெரிவித்தனர்.

எனவே தங்களுக்கு பணிகளை வழங்க வேண்டும் எனவும் மேற்கொண்டு கூடுதல் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அனைத்து தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற நிலையிலும் பல ஆண்டுகளாக வேலை கிடைக்காததால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சிலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் வேதனை தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக திமுக அரசு அவர்களது தேர்தல் வாக்குறுதியிலும் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் வருகின்ற 7ம்தேதி முதலமைச்சர் திருச்சி செல்ல உள்ள நிலையில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

19 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

19 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

19 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

20 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

21 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

21 hours ago

This website uses cookies.