தீபாவளிக்காக ரகசிய வசூல் வேட்டை.. தனி அறை அமைத்து ரூ.9 லட்சம் பணம் பதுக்கல் : சிக்கிய அரசு அதிகாரி!!
திருச்சி மாவட்ட வேளாண் விற்பனை குழு அலுவலகம் திருச்சி மதுரை மெயின் ரோட்டில் தலைமை இடம் கொண்டு செயல்படுகிறது.
இதன் செயலாளராக சுரேஷ் பாபு பதவி வகித்து வருகிறார். மேலும், திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்தும் வருகிறார்.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 14ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் இவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து சுரேஷ்பாபு தீபாவளி வசூல் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ரகசிய தகவலின் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார், மற்றும் குழுவினருடன் திருச்சி மதுரை சாலையில் உள்ள திருச்சி விற்பனை குழு அலுவலகத்தில் மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுரேஷ் பாபு இடமிருந்து கணக்கில் வராத 90ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ்பாபு விற்பனையாளர்களிடமிருந்து வசூல் செய்த பணத்தை கிராப்பட்டியில் தங்கி உள்ள அறையில் வைத்திருப்பதாக அளித்த தகவலின் பேரில் அறையை சோதனை செய்த போது அங்கும் கணக்கில் வராத 8 லட்சத்து 80ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் அவரிடமிருந்து 9லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.