நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியுள்ளார்.
மதுரை: நாகப்பட்டினத்தில் அடுத்த மாத, உறவுகள் சங்கமம் என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் வாழ்த்துரை வழங்க உள்ளார். இதனிடையே, இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாளின் பெயருக்கு கீழ் சமூக செயற்பாட்டாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர் தற்போது நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். ஆனால், கட்சிப் பொறுப்பை அழைப்பிதழில் குறிப்பிடாததால், அவர் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பான அறிவிப்பை காளியம்மாள் இன்று வெளியிடுவார் என அவரே தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார்.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், காளியம்மாள் விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “இலையுதிர் காலம் போன்று எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். யார் வேண்டுமானாலும் கட்சியிலிருந்து செல்லலாம். அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.
கட்சியில் இருப்பதற்கும், விலகுவதற்கும் காளியாம்மாளுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. காளியம்மாள் விலகினால் விலகட்டும், அவருக்கு வாழ்த்துகள். பக்கத்தில நிற்பவர் கூட நாளை வேறு ஒரு அமைப்புக்குப் போகலாம். வரும்போது வாங்க வாங்க, வணக்கம் என்போம். போகும்போது போங்க, ரொம்ப நன்றி, வாழ்த்துக்கள் எனச் சொல்வோம். இது எங்களுடைய கொள்கை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தி மட்டும்தான் தெரியும்.. சூப்பில் மிதந்த பூச்சி.. கோவை ஹோட்டலில் பரபரப்பு!
இந்த நிலையில், ஒருவேளை காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினால், அடுத்ததாக திமுகவிலோ அல்லது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திலோ இணையலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கட்சியில் இருந்து விலகி சில காலங்களுக்கு சமூக செயற்பாட்டாளராகவே காளியம்மாள் பயணிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.