யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதிலளித்துள்ளார்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தித் திணிப்பிற்கு எதிராக திமுக போராட்டம் நடத்தவில்லை, நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. 60 வருடமாக நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. கட்டாய இந்தித் திணிப்பில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியைத் திணித்துக் காட்டுங்கள். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் நீடிப்பது, வெளியேறுவதும் அவரவரதுச் சொந்த விருப்பம். இது ஒரு ஜனநாயக இயக்கம்.
விரும்பியவர்கள் கட்சிக்கு வருவார்கள், போவர்கள், இது குறித்து பேசிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு செய்தியாக, ஒவ்வொரு முறையும் கேட்கிறீர்கள். நான் பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது, அதை விடுங்கள், இது என் கட்சி பிரச்னை.
கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் பயணிப்பார்கள். வேறு ஒரு காரணம் இருக்கிறது என நினைத்தால் வெளியேறுவார்கள். யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல. அதை விட்டுவிடுங்கள். முரண்பாடு உள்ளவர்கள் வெளியேறுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்களவைத் தொகுதி குறைப்பா? ஸ்டாலின் அழைப்பு.. அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு என்ன?
முன்னதாக, இன்று காலை நாதக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று, நாதக மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், சமீப காலமாகவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிர்வாகிகள் விலகி வருவது குறிப்பிடத்தக்கது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.