Categories: தமிழகம்

சீமான் ஒரு அரசியல் தலைவரே இல்ல.. அரசியல் அரைவேக்காடு.. நாவடக்கம் தேவை : கீதா ஜீவன் ஆவேசம்!

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறான கருத்துக்களை சீமான் தெரிவித்து வருகிறார். கலைஞர் பற்றி தமிழ் மக்கள் அறிவர். கலைஞர், தமிழ்நாடு மக்களுக்காக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றியவர். தமிழ் மொழியை செம்மொழி ஆக்கியவர்.

மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். இளைஞர்களுக்காக கல்விக்கடன் ரத்து, கணினி வழங்கும் திட்டம், முதல் பட்டதாரி திட்டம் உட்பட பல திட்டங்களை தந்தவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர். அவரை அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

நாம் தமிழர் கட்சியினர் கலைஞரை அவதூறாக பேசுவதை கண்டிக்காமல் சீமான் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தலைவருக்குரிய பண்பு இல்லை. கலைஞரின் மறைவின் போது அவரை புகழ்ந்து பேசியவர் தற்போது மாற்றி பேசுகிறார்.

தமிழக முதல்வர், கழகத் தலைவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எங்கள் கட்சியினர் பொறுமையாக உள்ளனர். அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் கூறும்போது நாங்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை.

தற்போது சாதி ரீதியாக பேசியதாக துரை முருகன் மீது அருண் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீமான் கொள்கை இல்லாதவர். வாய்க்கு வந்ததை பேசுகிறார். சட்டம் ஒழுங்கில் பிர்சசனை ஏற்படுத்த முயன்று வருகிறார். ஏற்கனவே கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறியவர். ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்களை சாதிரீ ரியாக இழிவு படுத்தி அவதூறாக பேசியவர்.

அரை வேக்காட்டுத் தனமாக தினமும் ஒரு கருத்துக்களை தெரிவிக்கிறார். அவரது மனநிலையை சோதிக்க வேண்டும். சவுக்கு சங்கர், பெலிக்ஸ் கைது குறித்து கேள்வி கேட்கிறார்.

பெண் காவலர்கள் புகார் மீது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதை அவர் ஆதரிக்கிறாரா? கருத்துரிமை பறிக்கப்படுவதாக பேசுகிறார்.

தனிப்பட்ட முறையில் தவறாக பேசுவதை ஏற்க முடியாது. அவர் தவறான தகவல்களை தெரிவித்து தமிழ் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனையை முன்நிறுத்தி உலக அளவில் அவர் நிதி பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ராஜபக்சேவை போல திமுகவையும், அதன் தலைவர்களையும் தமிழர்களின் விரோதியாக சித்தரித்து அவதூறாக பேசி வருகிறார். சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.