நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தொடர்ந்த வழக்கில் வழக்கு விசாரணை வரும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 4 நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை அவதூறாக பேசி வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பதிவிட்டதும் சீமான் வருண்குமாரை அவதூறாக பேசியது தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் மனு தாக்கல் செய்தார் வருண்குமார்.
இதையும் படியுங்க: வாழும் கண்ணகியா? சுந்தர் சி தான் உண்மையான கண்ணகி… பொங்கியெழுந்த பிரபலம்!
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் ஆஜரானார். DiG வருண் குமார் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவரது வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசி உள்ளார்.
சீமானுக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை. ips என்பது மிகவும் உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது?
இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம். டிஐஜி வருண்குமார் சார்பில் இரண்டு பேர் சாட்சியம் அளித்த போது சாட்சிகளை நீதிபதி பாலாஜி விசாரித்தார். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் மீண்டும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.