தமிழகம்

100 நாள் வேலைக்காக காத்திருக்கும் சீமானின் தாயார்? வெளியான வீடியோ!

100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, நாதக கொடி வைத்த காரில் சீமானின் தாயார் ஏறிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற்து.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராம மக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் பணி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்போது, இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தக் கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்தனர். தொடர்ந்து, அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இவ்வாறு வந்த கிராம மக்களோடு, இதே கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாளும் வந்திருந்தார்.

இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர், அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 100 நாள் வேலைவாய்ப்பை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். அந்த வகையில்,, சீமானின் தாயார் அன்னம்மாள் நாதக கொடி கட்டி வந்த பொலேரோ வாகனத்தில் ஏறிச் சென்றார்.

முன்னதாக, இந்தக் கிராம மக்கள் இளையான்குடி தாலுகா அலுவலகத்திற்குச் சென்று, அரணையூர் கண்மாய்க்கு வரும் வைகை ஆற்று நீர் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த குழாய்கள் கோர்ட் உத்தரவுப்படி பாதி அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள குழாய்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: கேல் ரத்னா விருதுக்கு தகுதி இல்லையா? மௌனம் கலைத்த மனு பாக்கர்!

மெலும், அரணையூர் கண்மாயில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கண்மாய் முழுமையாக நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை சீமான் விமர்சித்து வரும் நிலையில், அவரது தாய் அதே வேலையைக் கேட்டு வந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.