தமிழகம்

100 நாள் வேலைக்காக காத்திருக்கும் சீமானின் தாயார்? வெளியான வீடியோ!

100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, நாதக கொடி வைத்த காரில் சீமானின் தாயார் ஏறிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற்து.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராம மக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் பணி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்போது, இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தக் கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்தனர். தொடர்ந்து, அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இவ்வாறு வந்த கிராம மக்களோடு, இதே கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாளும் வந்திருந்தார்.

இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர், அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 100 நாள் வேலைவாய்ப்பை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். அந்த வகையில்,, சீமானின் தாயார் அன்னம்மாள் நாதக கொடி கட்டி வந்த பொலேரோ வாகனத்தில் ஏறிச் சென்றார்.

முன்னதாக, இந்தக் கிராம மக்கள் இளையான்குடி தாலுகா அலுவலகத்திற்குச் சென்று, அரணையூர் கண்மாய்க்கு வரும் வைகை ஆற்று நீர் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த குழாய்கள் கோர்ட் உத்தரவுப்படி பாதி அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள குழாய்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: கேல் ரத்னா விருதுக்கு தகுதி இல்லையா? மௌனம் கலைத்த மனு பாக்கர்!

மெலும், அரணையூர் கண்மாயில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கண்மாய் முழுமையாக நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை சீமான் விமர்சித்து வரும் நிலையில், அவரது தாய் அதே வேலையைக் கேட்டு வந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

1 hour ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

2 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

2 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

3 hours ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

3 hours ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

4 hours ago

This website uses cookies.