கோவை: கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை காந்திபுரம் மற்றும் தண்ணீர் பந்தல் பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, காவல் ஆய்வாளர் மேனகா தலைமையிலான போலீசார் காந்திபுரம் டாடாபாத் பகுதியில் உள்ள குடோனில் ஆய்வு செய்த போது மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதே போல் தண்ணீர் பந்தல் சாலையில் குடோனிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 4 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, சலாம், கண்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவர்கள் இருவரும், கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை பெற்று வடமாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.