கோவை: கோவை இரயில் நிலையத்திற்கு வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் நேற்று இரவு 9.30 மணியளவில், சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் வேஸ்ட் கோஸ் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ரயில்வே உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில், ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்கே கழிவறை அருகே ஒரு மூட்டை கேட்பாரற்று கிடப்பதை கண்ட ரயில்வே போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். அதில் சுமார் 5 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா பொருட்களை கொண்டு வந்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் யாரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளாத நிலையில் புகையிலைப் பொருள்களை மட்டும் பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.