தூத்துக்குடி : கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அந்தோணி பட்டுராஜ் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரியப்பன், காவலர்கள் செல்வகுமார், செல்வி ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், காரில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா ஹைவேலியைச் சேர்ந்த திருமூர்த்தி (41) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் ரயில்வே இரண்டாவது இருப்புப்பாதை பணியில் ஒப்பந்ததாரராக இருப்பதாக தெரிவித்தார். பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லட்சத்தை பறிமுதல் செய்து, கோவில்பட்டி நகராட்சி மேலாளர் பெருமாளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் கொண்டு வந்து காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி வெங்கடேஷிடம் அறிவுறுத்தினர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.