தமிழ்நாட்டின் அரசியல் தெரியாமல் சிலர் அறியாமையில் கருத்து கூறி வருகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக விஜயை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
சென்னை: சென்னையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச.07) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதி என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர், அதிமேதாவிகளாக, தற்குறிகளாக, களத்திற்கே வராதவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல, 234 தொகுதியையும் திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் கைப்பற்றும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, திமுகவுக்கு எப்போதெல்லாம் இது போன்ற அவதூறுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் திமுக, 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பார்கள்.
மீண்டும் 2026இல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரியணையில் ஏற்றும் வரை எங்களுடைய பயணம், எங்களுடைய வேகம் குறையாது. யாராவது குறையும் என்று நினைத்தால், அது பகல் கனவாகவே இருந்துவிடும்” எனத் தெரிவித்தார். இதனை மறைமுகமாக தவெக தலைவர் விஜயைக் கூறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால், நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்போடு 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
இதையும் படிங்க: விஜயின் கடைசி ‘நச்’.. கைதட்டிய ஆதவ் அர்ஜூனா.. கைவிடப் போகிறாரா திருமா?
நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட வர முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன், அவருடைய மனம் முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்” என பேசினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.