கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் சுப்பையர் குளம் உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது.
இந்த குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை எடுத்து மாநகராட்சி அந்த குளத்தை தூர்வார 47 லட்ச ரூபாய் அனுமதித்தது.
இந்நிலையில் இதனை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஜெகன் குளத்தை தூர் வருவதற்கு பதிலாக சுமார் 8 அடி ஆழம் தோண்டி 1 மாதத்தில் சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் மண்ணை எடுத்து அதனை 84 லட்ச ரூபாய்க்கு விற்று உள்ளதாகவும், மாநகராட்சி ஒப்பந்தத்தை மீறி குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்த ஒப்பந்ததாரர் ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவர் முத்துராமன் தலைமையில் சுனில், ரமேஷ், தினகரன்,ரோசிட்டா திருமால், ஆச்சியம்மாள் உள்ளிட்ட பா.ஜ.க கவுன்சிலர்கள் இன்று ஆணையர் ஆனந்த் மோகனிடம் புகார் மனு அளித்தனர்.
ஒப்பந்ததாரர் ஜெகன் மீது மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கா விடில் இரண்டு நாட்களில் பாஜக சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.