ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை விமான நிலையம் அருகே இருக்கக்கூடிய வலையங்குளம் பகுதியில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது
இந்த நிலையில் இன்று மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்திபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மக்களை சந்தித்து மாநாடு அழைப்பிதழை வழங்கினார்
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக மாமன்ற உறுப்பினர் லத்திகாஸ்ரீ செல்லூர் ராஜு அவர்களை சந்தித்தவுடன் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து அவரை வரவேற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சந்தனம் குங்குமம் வெற்றிலை பாக்குடன் திமுக மாமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிமுக மாநாடு அழைப்பிதழை கொடுத்து மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜு போட்டியிட்டபோது அப்போதைய திமுக ஜெயந்திபுரம் பகுதி செயலாளர் ஏ கே முருகானந்தம் செல்லூர் ராஜு ஓட்டு கேட்டு வந்த போது சால்வை அணிவித்ததால் திமுகவின் மேலிடத்திலிருந்து ஏகே முருகானந்தம் பகுதி செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது செல்லூர் ராஜுவை திமுக மாமன்ற உறுப்பினர் லத்திகா ஸ்ரீ சால்வை அணிவித்து மாநாடு அழைப்பிதழை பெற்றுள்ளது திமுக கட்சிக்குள் பேசும் பொருளாக மாறி உள்ளது
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.