ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல் மதுரை நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை காமராஜர் சாலை, அரசமரம் விநாயகர் கோவிலில் மாநாடு அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அழைப்பதனை கொடுத்து மாநாட்டிற்கு வரவேற்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது;- வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான அழைப்பிதழை மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று அதிமுகவினர் வழங்க உள்ளதாகவும், ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல், மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான், என்றார்.
தொடர்ந்து, பேசிய அவர் மாநாட்டிற்காக ஒரு லட்சத்து 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்க எடப்பாடி யார் உத்தரவிட்டுள்ளார். டிஜிட்டல் முறையில் மாநாடு அமைய உள்ளது. இதில் அதிமுக தொடக்கம் முதல் தற்போது வரை உள்ள சாதனைகளை கண்காட்சியாக மாநாடு இடம் பெற உள்ளது. திமுகவை அழிக்கின்ற மாநாடாக இந்த மாநாடு அமையும். திமுகவுக்கு ஒரு பின்னடைவை உருவாக்கி கொடுக்கும், என்றார்.
பா.ஜ.க மதுரை மாவட்ட தலைவர் அறிக்கை குறித்த கேள்விக்கு, பதில் சொல்ல மறுத்து விட்டார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.