திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெரு வைச் சேர்ந்தவர் நாகப்பன் (75) மனைவி கல்யாணி(69). கடந்த மூன்றாம் தேதி அவரது வீட்டின் சமையலறையில் இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தங்கம், வைர நகைகளைக் காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவரது வீட்டுக்கு குடிநீர் விநியோகிக்கும் பண்ணப்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த கேசவன்(28) என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்
அப்போது கேசவன் தனது நண்பர்களான ராமச்சந்திரன் என்கிற வீரா(35), வெங்கடேஷ்(36), ராமன் (28), பழனிசாமி ஆகியோருடன் சேர்ந்து நகைகளுக்காக, கல்யாணியை கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து கேசவனைப் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து சுமார் 18 பவுன், 1ஜோடி வைரத்தோடு, நகைகள் மற்றும் ரூ.30ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இக்கொலை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரன், வெங்கடேஷ், ராமன் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
This website uses cookies.