திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெரு வைச் சேர்ந்தவர் நாகப்பன் (75) மனைவி கல்யாணி(69). கடந்த மூன்றாம் தேதி அவரது வீட்டின் சமையலறையில் இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தங்கம், வைர நகைகளைக் காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவரது வீட்டுக்கு குடிநீர் விநியோகிக்கும் பண்ணப்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த கேசவன்(28) என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்
அப்போது கேசவன் தனது நண்பர்களான ராமச்சந்திரன் என்கிற வீரா(35), வெங்கடேஷ்(36), ராமன் (28), பழனிசாமி ஆகியோருடன் சேர்ந்து நகைகளுக்காக, கல்யாணியை கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து கேசவனைப் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து சுமார் 18 பவுன், 1ஜோடி வைரத்தோடு, நகைகள் மற்றும் ரூ.30ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இக்கொலை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரன், வெங்கடேஷ், ராமன் தேடி வருகின்றனர்.
பிரபலங்கள் திடீரென திருமணம் செய்வது குறைந்த வருடங்களில் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்வது அனைத்து துறையிலும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது.…
மிடில் கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலரது…
கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
This website uses cookies.