குழந்தை கடத்தல் வழக்கில் பரபரப்பு திருப்பம்… நாடகமாடிய தாய்.. கடத்தல் கும்பலில் வழக்கறிஞர் : வெளிச்சத்திற்கு வந்த நெட்வொர்க்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2023, 3:50 pm
Child Kidnap - Updatenews360
Quick Share

குழந்தை கடத்தல் வழக்கில் வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு – குழந்தையை கடத்தும் பெரிய நெட்வொர்க் கும்பலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம், லால்குடி, அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வழக்கறிஞர் பிரபு(வயது 42), அவரது மனைவி மெர்சி இருவரும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் பிரபுக்கும், மெர்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த சண்முவள்ளி வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர் பிரபுவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு கள்ளக்காதலாக மாறி இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

லால்குடி அடுத்த அன்பில் மங்கமாள்புரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஜானகி (வயது 32). வழக்கறிஞர் பிரபுவின் அலுவலகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தநிலையில் ஜானகி பல ஆண்களிடம் தகாத உறவு வைத்துக் கொண்டதால் கர்ப்பம் தரித்துள்ளார்.

மேலும் கடந்த ஜூலை மாதம் ஜானகி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததையடுத்து ஜானகி என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கறிஞர் பிரபுவிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபு, ஜானகியிடம் குழந்தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். ஆனால் பிரபு மற்றும் அவரது கள்ளமனைவி சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து ஆண் குழந்தை பிறந்தால் 5 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை பிறந்தால் 3.5 லட்சம் ரூபாய்க்கும் விற்பதற்காக ஜானகிக்கு தெரியாமல் திட்டம் தீட்டியுள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணியான ஜானகி செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தனியார் மருத்துவமனையில் கணவர் யார் என்பது தெரியாததால் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

அங்கு ஜானகிக்கு செப்டம்பர் 17ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் யார் என மருத்துவர்கள் கேட்டுள்ளனர் அதற்கு பதில் தராதால் மருத்துவமனை நிர்வாகம் சைல்ட் லைனுக்கு தொடர்பு கொண்டு ஜானகி குழந்தை பிறந்தது குறித்து தெரிவித்தனர்.

இதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரபு சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து ஜானகி மற்றும் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகினார்.

பிறந்து 10 நாட்கள் ஆன குழந்தையை வழக்கறிஞர் பிரபு மற்றும் அவரது கள்ள மனைவி சண்முகவள்ளி இருவரும் சேர்ந்து ஜானகி மற்றும் பிறந்த குழந்தையை காரில் அழைத்துக் கொண்டு நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவில் ரயில்வே மேம்பாலம் அருகில் கடந்த 23ஆம் தேதி சென்று அங்கு குழந்தையை விற்று விடலாம் என ஜானகிடம் தெரிவித்து குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து 80 ஆயிரம் ரூபாய் ஜானகியிடம் கொடுத்துவிட்டு இருபதாயிரம் ரூபாய் பிரபு மற்றும் சண்முகவள்ளி எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் பிரபு பெண் குழந்தையை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில். ஜானகி இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் மீது நடவடிக்கை இல்லாததால் கடந்த அக்டோபர் மாதம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தன் குழந்தையை காணவில்லை எனவும் இதற்கு காரணம் வழக்கறிஞர் பிரபு மற்றும் சண்முகவள்ளி தான் என புகார் அளித்துள்ளார்.

மேலும் ஜானகி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவிடுகிறார். அதில் போலீசார் என் குழந்தையை கண்டுபிடிக்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், இதற்கு காரணமான பிரபு மற்றும் சண்முகவள்ளி தான் என இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்த நிலையில் மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் 15 போலீசாரை கொண்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4ம் தேதி ஜானகி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பிரபு மற்றும் சண்முகவள்ளிக்கு எந்த தொடர்பும் இல்லை, குழந்தை என்னிடம் தான் உள்ளது என்று நீதிபதியிடம் ஜானகி தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட நீதிபதி ஜானகியின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் நீதிபதி, ஜானகியிடம் குழந்தையை காட்டுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஜானகி குழந்தையை காட்டாததால் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜானகி மீது உரிய விசாரணை நடத்தி குழந்தையை கண்டுபிடிங்கள் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாருக்கு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ஜானகியை தனிப்படை போலீசார் நடத்தி ஜானகி மீது 8 பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிபதியிடம் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

மேலும் போலீசார் விசாரணையில் ஜானகிக்கு பிறந்த குழந்தையை வழக்கறிஞர் பிரபு மற்றும் சண்முகவள்ளி திருச்சி மாநகர் அரியமங்கலம் அடுத்து காட்டூர் பகுதியை சேர்ந்த கவிதா (சுய உதவி குழுவை சேர்ந்தவர்) என்பவர் மூலமாக குழந்தையை விற்றதாக பிரபு வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து வழக்கறிஞர் பிரபு, சண்முகவள்ளி, கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சுய உதவி குழுவை சேர்ந்த கவிதாவை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மூன்று கை மாறி குழந்தையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

குழந்தை கடத்தி விற்பனை செய்த கும்பலுடன் சேர்ந்து இதுவரை எத்தனை குழந்தைகளை விற்பனை செய்துள்ளார்கள் என்றும், ஜானகிக்கு பிறந்த குழந்தையை விற்பனை செய்தார்களா? அல்லது நரபலி கொடுத்தார்களா? என்பது குறித்து செல்ஃபோன் டவரை வைத்து தனிப்படை போலீசார் பார்த்ததில் சென்னை, நாமக்கல், திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் சிக்னல் காட்டுவதால் தமிழகத்தில் குழந்தை கடத்தும் பெரிய நெட்வொர்க் கும்பலாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை செய்து குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 570

0

0