சமீபமாக அதிக சர்ச்சைகளில் நடிகை ஸ்ரீநிதியின் பெயர் அடிப்பட்டு வருகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்து இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’நினைத்தாலே இனிக்கும்’ தொடரில் நடித்து வந்த அவர், சமீபத்தில் அதிலிருந்து விலகினார். சிம்புவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் எனவும் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதற்கிடையே சீரியல் நடிகை நக்ஷத்ராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசியிருந்தார் ஸ்ரீநிதி. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ‘வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருந்தார் நக்ஷத்ரா. இதன் மூலம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானார்.
சமீபத்தில் ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோவில், நக்ஷத்திராவுக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆகியதாகவும், அவர் நல்லவர் இல்லை என்றும், அவரது மொத்த குடும்பமும் நட்சத்திராவை ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் அந்த வீடியோவை டெலீட் செய்து விட்டார்.
இந்நிலையில் ஸ்ரீநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நக்ஷத்திரா, “2-3 நாளா நான் எதோ பிரச்னைல இருக்குறதாவும், நா லவ் பண்றவரோட குடும்பம் என்ன இறுக்கி பிடிச்சி வச்சிருப்பதாகவும் ஒரு விஷயம் பரவிட்டு இருக்கு. அவள ஃபாலோ பண்றவங்களுக்கு தெரியும், அவ கொஞ்ச நாளா ஏதோ டிப்ரஷன்ல பண்ணிட்டு இருக்கா. ஸோ நீங்க அதை பெருசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனச்சேன். ஆனா எனக்கும், என் கூட இருக்கவங்களுக்கும் ஃபோன் பண்ணி, என்ன பத்தி விசாரிக்கிறீங்க. அதனால தான் இந்த வீடியோ. சத்தியமா எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, நல்லா இருக்கேன், சேஃபா இருக்கேன், நிம்மதியா இருக்கேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.