கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி திமுக கிளைச் செயலாளர் உதயகுமார் 10 அடியாட்களை கொண்டு தாக்கியதில் திமுக புதுப்பட்டி ஊராட்சி துணைச்செயலாளர் தங்கராசு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி துணைச் செயலாளராக இருப்பவர் தங்கராசு (வயது 40) இவரது மனைவி சுகன்யா இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே ஊராட்சியில் திமுக கிளைச் செயலாளராக உதயகுமார் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று தங்கராசு இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது அவரை வழி மறைத்த திமுக கிளைச் செயலாளர் உதயகுமார் மற்றும் சரண், கார்த்திக், சுபாஷ், கு.ப. மணிகண்டன் உட்பட 10 நபர்கள் சரமாரியாக ஆயுதங்கள் மற்றும் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். மேலும் தங்கராசு ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதில், தலை, முதுகு, தொடை, கால் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டு நிலைகுலைந்த தங்கராசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், புதுப்பட்டி ஊராட்சி திமுக கிளைச் செயலாளர் உதயகுமார் மற்றும் துணைச் செயலாளர் தங்கராசு ஆகியோருக்கு இடையே தொழில் ரீதியான போட்டி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கிடையே ஏற்கனவே, இதுபோன்ற சண்டைகள் 10 முறைக்கு மேல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்து கன்னிவாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தங்கராசு தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறியவாரே சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.