தமிழகம்

துண்டான உடல் பாகங்கள்.. பதற வைத்த ஃபெஞ்சலின் கோர முகம்.. இருவரை மீட்பது எப்போது?

திருவண்ணாமலை நிலச்சரிவில் புதைந்து 7 பேர் உயிரிழந்ததற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இந்த நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் நேற்றைய முன்தினம் (டிச.1) மாலை 4.40 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 9வது தெருவில் உள்ள குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கின. அப்போது சுமார் 40 டன் எடை கொண்ட பாறை ஒன்று உருண்டு வந்து அபாயகரமான வகையில் நின்றது. இந்த மண் சரிவில் சிக்கிய 3 வீடுகளில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது.

மேலும் இரண்டு வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பி உள்ளனர். அதேநேரம், ராஜ்குமார் வீட்டுக்குள் ராஜ்குமா, அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா, ராஜ்குமாரின் உறவு சிறுமிகளான மகா, வினோதினி மற்றும் ரம்யா என 7 பேர் இருந்தனர்.

பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் மிகப்பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமான வகையில் இருந்ததால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர் நேற்று (டிச.2) காலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இத ஒருகட்டத்தில் வீட்டின் அருகே கிடந்த மண் குவியல்களை அப்புறப்படுத்திய மீட்புப் படையினர், முதலில் சிறுவன் கவுதமனின் உடலை மீட்டனர்.

இதனையடுத்து ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகள் இனியா, பக்கத்து வீட்டு சிறுமி வினோதினி ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால், உடல்களை பாகம் பாகமாக மீட்டது அங்கிருந்தவர்களின் கண்களை கலங்கச் செய்தது. இதனிடையே, மிகப்பெரிய பாறை ஒன்று இருந்ததால், மீதமுள்ள இருவரின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு, இன்று (டிச.3) மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: கர்ப்பிணி பேராசிரியை மரண வழக்கில் திருப்பம்.. சாட்சியாக வந்த 4 வயது மகன்!

இந்த நிலையில், மீதம் உள்ள இருவரின் உடல்களை மீட்பதற்கு தாமதாமவதை அடுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே, இந்த திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.