திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி, பொன்கோவில் நகர் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் தனது மனைவியை வைத்து பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து திருப்பூர் மற்றும் பிற பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி, நல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பவித்ரன் வீட்டில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டபோது மூன்று காவலர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பவித்ரனுடன் அவரது செல்போனை, பிடுங்கிக்கொண்டு, ஒரு லட்சம் பணம் கொடுத்தால் பவித்ரனை விட்டு விடுவதாக கூறி காரில் கடத்திச் சென்றனர்.
பின்னர் பவித்ரனின் மனைவி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு நல்லூர் போலீசார் பவித்ரனின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை செய்து தேடி சென்றபோது பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் மேற்கண்ட பவித்ரனையும், ஈரோட்டை சேர்ந்த தனபால் சிங் (47), முருகன்(42) என்பவர்களையும் அடைத்து வைத்திருந்தனர்.
மேலும் அவர்களை அடைத்து வைத்திருந்த போலீசார் சோமசுந்தரம் (33), கோபால்ராஜ் (33), லட்சுமணன்(32) ஆகியோரையும் மற்றும் உடனிருந்த ஜெயராமன் (20), அருண்குமார்(24), ஹரிஷ் (25) ஆகியோரையும் கைது செய்தனர்.
மேலும், இது தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பபட்டனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டஆயுதப் படையில் பணியாற்றி வந்த போலீஸ்காரர்கள் சோமசுந்தரம், கோபால் ராஜ் ஆகியோரையும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இதேபோல நீலகிரி மாவட்டம், சோலார் மட்டம் காவல் நிலையத்தில் பணியாற்றிய லட்சுமணன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.