Categories: தமிழகம்

தண்டனை அறிவித்த போது நீதிபதி முன் விஷம் அருந்திய பாலியல் குற்றவாளி : மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு, தற்கொலைக்கு முயன்ற செல்வம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராஜபாளையம் அருகே தேவதானத்தைச் சேர்ந்த செல்வம் என்ற நபர் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் செல்வம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அத்து மீறி சிறுமி வீட்டிற்குள் புகுந்த குற்றத்திற்கு 2 வருடம், சிறுமியை தாக்கியதால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட குற்றத்திற்காக 2 வருடம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 10 வருடம் என 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 6000 அபராதம் விதித்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

நீதிபதி தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கும் போதே செல்வம் மறைத்து வைத்திருந்த அரளி விதையை சாப்பிட்டார். உடனடியாக சுதாரித்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் மயங்க நிலையில் இருக்கும் செல்வத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீதிபதி முன்பு குற்றவாளி ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலைக்கும் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.