தமிழகம்

4 நாட்களில் தமிழகத்தை உலுக்கிய பாலியல் சம்பவங்கள்.. ஸ்டாலினுக்கு எதிராக பாயும் கேள்விகள்!

தமிழகத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பாலியல் கொடுமை சம்பவங்களால் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சென்னை: ”மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சி?” என தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

காரணம், இன்று மட்டுமே திருச்சி, மணப்பாறை அருகே உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி தாளாளர் கணவர், முதல்வர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், கோவையில் இருந்து திருப்பதி சென்று கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வேலூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிலும், ‘கர்ப்பிணினு கூட பாக்கல, அரைமணி நேரம் போராடுனேன், கத்துனதால இரக்கமே இல்லாம என்னைய கீழ தள்ளிவிட்டான்’ என பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கண்ணீர் மல்க கூறியது இன்று தமிழகம் முழுவதும் ரணமாகியுள்ளது. மேலும், சிவகங்கை அருகே அரசுப் பள்ளி மாணவியை போட்டோ எடுத்து வர்ணித்ததாக, தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் கைது என இன்றைய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளன.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற குற்றச் சம்பவங்களும் அடுத்தடுத்து பெண்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக இருக்கின்றன. குறிப்பாக, கிருஷ்ணகிரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மூன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதோடு, சிவகங்கை மானாமதுரை அருகே 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டது என பாலியல் தொல்லை சம்பவங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த நிலையில், எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணினு சொல்லியும் விடல.. பாதிக்கப்பட்ட பெண் வேதனை பேட்டி!

அந்த வகையில், “கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுகவினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுகவின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது.

பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

15 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

16 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

17 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

17 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

17 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

18 hours ago

This website uses cookies.