கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் வெளியூர் மன்வைகள் வால்பாறை அரசு மகளிர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் ஒருங்கிணைந்த சேவை மையம் கிருஷ்ணவேணி தலைமையில் வால்பாறை கல்லூரிக்கு விழிப்புணர்வு சம்பந்தமாக வருகை தந்துள்ளனர்.
இதில் விழிப்புணர்வில் மாணவிகளிடம் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா படிக்கும் இடத்தில் தொந்தரவு உள்ளதா சமுதாயத்தில் தொந்தரவு உள்ளதா போன்ற கேள்விகளை மாணவிகளிடம் கேட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து 7 மாணவிகள் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் சிலர் எங்களை தொட்டு பேசுதல் ஆபாசமாக பேசுதல் அலைபேசிக்கு தவறான மெசேஜ் அனுப்புதல் போன்ற செயலில் ஈடுபடுவதாகவும் இவர்களால் தொந்தரவு ஏற்படுகிறது.எங்களால் படிக்க இயலவில்லை நாங்கள் வெளியூருக்கே செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள கிருஷ்ணவேணி தலைமையில் வால்பாறை காவல் நிலையத்துக்கு இது சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வால்பாறையில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் தலைமையில் வால்பாறை கலைக்கல்லூரி மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தற்காலிக பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர் ஒருவரும் என்சிசி பயிற்சியாளர் ஒருவரும் உள்ளதாக தெரியவந்தது இதைத் தொடர்ந்து 4 பெயர்களையும் பாலியல் சீண்டல் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.