தூத்துக்குடி ; காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியை சார்ந்த முத்தம்மாள் என்ற 70 வயது மூதாட்டி நாள்தோறும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்றும் காலை வழக்கம் போல பணிக்கு வந்த அவரிடம் தலைமை காவலர் செல்வகுமார் ரைட்டர் ரூமில் புகையிலை உள்ளது எடுத்துட்டு வா என கூறியுள்ளார்.
அதற்கு அந்த மூதாட்டி என்னால் முடியாது நான் கிளம்புகிறேன் எனக் கூறியுள்ளார். அப்படி என்றால் காசு கொடு என கேட்டு செல்வக்குமார் அந்த மூதாட்டியிடம் தொந்தரவு செய்து, அந்த மூதாட்டி அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூக்குரலிட்டு இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 70 வயது மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தனது பணிகளை சரிவர செய்யாமல் இருந்த தலைமை காவலர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.