தூத்துக்குடி ; காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியை சார்ந்த முத்தம்மாள் என்ற 70 வயது மூதாட்டி நாள்தோறும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்றும் காலை வழக்கம் போல பணிக்கு வந்த அவரிடம் தலைமை காவலர் செல்வகுமார் ரைட்டர் ரூமில் புகையிலை உள்ளது எடுத்துட்டு வா என கூறியுள்ளார்.
அதற்கு அந்த மூதாட்டி என்னால் முடியாது நான் கிளம்புகிறேன் எனக் கூறியுள்ளார். அப்படி என்றால் காசு கொடு என கேட்டு செல்வக்குமார் அந்த மூதாட்டியிடம் தொந்தரவு செய்து, அந்த மூதாட்டி அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூக்குரலிட்டு இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 70 வயது மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தனது பணிகளை சரிவர செய்யாமல் இருந்த தலைமை காவலர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.