தமிழகம்

7ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. பள்ளி விடுதியில் அரங்கேறிய பயங்கரம்!

கோவை பகுதியில் அமைந்து உள்ள பிரபல மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி பயின்று வருகிறான்.

அந்த மாணவனுக்கு அதே விடுதியில் தங்கி உள்ள பத்தாம் வகுப்பு மாணவன் இரவு தூங்கும் நேரத்தில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அளித்து வந்து உள்ளார்.

இதையும் படியுங்க : நாய்களுக்கு இடையே சண்டை.. சிறையில் பாஜக பிரமுகர் : காங்கேயத்தில் களேபரம்!

இதுகுறித்து மாணவன் விடுதி காப்பாளர்களிடம் தகவல் அளித்த நிலையில் தகாத செயலில் ஈடுபட்ட பத்தாம் வகுப்பு மாணவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவன் ஆறாம் வகுப்பு படித்த போது இதே போல் மாணவன் பாலியல் தொந்தரவுகளை தந்ததாகவும் அப்போது விடுதி காப்பாளர்கள் மாணவனின் பெற்றோரை அழைத்து மன்னிப்பு கடிதம் வாங்கி உள்ளனர்.

ஆனால் தற்போது அதே மாணவன் மீண்டும் இந்த செயலில் ஈடுபட்டதால் ஏழாம் படிக்கும் மாணவன் அச்சத்தில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் யாரிடமும் சொல்லாமல் தனது வசிக்கும் வீட்டிற்கு சென்று உள்ளான்.

இரவு பணி முடிந்து அவனது தந்தை வீட்டிற்கு வந்த போது மகன் மட்டும் தனியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, மாணவனை கண்டித்ததுடன் எதற்காக வீட்டிற்கு வந்தாய் என கேட்டு உள்ளார்.

அப்போது மாணவன் விடுதி அறையில் தூங்கிக் கொண்டு இருந்த போது பத்தாம் வகுப்பு மாணவனால் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறியதோடு விடுதியில் தங்க பயமாக இருப்பதாகவும் கூறி உள்ளான்.

இதைத் தொடர்ந்து இன்று காலை மாணவனை அழைத்துக் கொண்டு பள்ளி விடுதிக்கு வந்த அவனது தந்தை விடுதி காப்பாளர்களிடம் இது குறித்து புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது இதெல்லாம் சின்ன விஷயம் எதற்காக பெரிது படுத்துகிறீர்கள் நாங்கள் அனைத்து குழந்தைகளையும் எங்களது குழந்தைகளை போல் தான் பார்த்துக் கொள்கிறோம் என கூறிய விடுதி காப்பாளர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து விசாரிக்கிறோம் என தெரிவித்தனர்.

மேலும் விடுதி அறையில் சி.சி.டி.வி கேமராக்கள் வைத்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாங்கள் கண்காணித்து வருவதாகவும் அப்படி எல்லாம் ஒரு சம்பவம் அண்மையில் நடைபெறவில்லை எனவும் விடுதி காப்பாளர்கள் தெரிவித்தனர்.

அதே வேளையில் மாணவன், விடுதியில் தங்கி படிக்க பயமாக இருக்கிறது எனவும் பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் தனது நண்பர்களுடன் வந்து தன்னை மிரட்டுவார் அல்லது அடிப்பார் என்றும் தேர்வு வரும் வரை தினசரி வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்கிறேன் என்றும் கூறினார்.

தொடர்ந்து மாணவனை பள்ளியிலேயே விட்டுச் சென்ற அவனது தந்தை பாதியில் அழைத்துச் சென்றார், கல்வி பாதிக்கும் என்பதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி காப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…

14 minutes ago

ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…

விஜய்யின் கடைசி திரைப்படம்  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…

1 hour ago

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…

2 hours ago

அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

2 hours ago

படையப்பா ரஜினிக்கு பதில் செந்தில் பாலாஜி… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…

3 hours ago

This website uses cookies.