Categories: தமிழகம்

அரசு கலைக்கல்லூரியில் பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை… பேராசிரியருக்கு துணை போகும் நிர்வாகம்? ஒன்று கூடிய பேராசிரியர்களால் பரபரப்பு…!!

கோவை அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் ஒருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறைக்க கல்லூரி முதல்வர் முயல்வதாக குற்றம் சாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கல்லூரியில் பேராசிரியை பாலியல் புகார் தெரிவித்த நிலையில் உதவி பேராசிரியர் ரமேஷ் சிவகாசிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு சில வாரங்களிலேயே தனது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் கோவை அரசு கல்லூரியில் பணியில் இணைந்தார்.

இருப்பினும் ஆசிரியைகள் அவர் மீது கல்லூரி முதல்வரிடமும் முதலமைச்சரின் தனி பிரிவிலும் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பணி புறக்கணிப்பு செய்ததுடன் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் வீரமணி தலைமையில் அரசு கலைக் கல்லூரி வாயில் அருகே நின்று பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி பேராசிரியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கல்லூரி முதல்வருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்,

ஒருபுறம் பேராசிரியர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சூழலில் அதே பகுதியில் பேராசிரியர்களுக்கு எதிராக நின்று உதவி பேராசிரியர் ரமேஷின் மாணவிகள் நான்கு பேர் பேராசிரியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

அப்போது உதவி பேராசிரியர் ரமேஷின் தூண்டுதலாலேயே மாணவிகள் மூன்று பேர் மற்றும் அவரது தாயார் தங்களுக்கு எதிராக முழக்கமிடுவதாக பேரசிரியர்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே போராட்டம் குறித்து தகவலறிந்த மண்டல கல்லூரி கல்வி இயக்குநர் உலகி போராட்டத்தில் ஈடுபட்ட பேரசிரியர்களிடம் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டறிந்தார்.

பின்னர் இது தொடர்பாக கல்லூரி முதல்வர் மற்றும் குற்றச்சாட்டுக்குள்ளான உதவி பேராசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

7 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

8 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

8 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

8 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

9 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

10 hours ago

This website uses cookies.