இட்லி விற்கும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபரை தரும அடி கொடுத்து செருப்படியால் பதில் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் சாலை ஓரம் இட்லி கடை நடத்தும் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு அந்தப் பெண் நடுரோட்டில் பலர் கண் முன் தர்ம அடி கொடுத்து இனிமேல் என் கண்ணில் தென்பட்டால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்க: தீவிர சிகிச்சையில் கங்கை அமரன்… திடீர் உடல்நலம் மோசமடைந்ததால் பரபரப்பு!!
கரீம் நகரில் சாலை ஓரத்தில் இட்லி கடை நடத்தும் பெண் ஒருவர் நேற்று இரவும் வழக்கம் போல் கடை போட்டு இருந்த நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேசிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த அந்தப் பெண் அந்த நபரின் சட்டையை பிடித்து நடுரோட்டில் வைத்த தர்ம அடி கொடுத்து இனிமேல் என் முன் தென்பட்டால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அந்தப் பெண்ணை தேடி பிடித்து புகாரை எழுதி வாங்கிக் கொண்ட போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இளம் பெண்ணின் துணிச்சல் பலரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.