மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு.. போதையில் புத்தி மாறிய ஆசாமிகள்.. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!!
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் மது போதையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முறப்பநாடு போலீசார் வடக்கு காரசேரியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரை கைது செய்தனர்.
மற்றொரு நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு சங்கத்தினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்று முறப்பநாடு காவல் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சங்கத்தின் நிர்வாகிகள் 10 பேரை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறப்பநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என அவர் உறுதி அளித்ததின் பேரில் மாற்று திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அப்போது ஒரு வார காலத்திற்குள் குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால் திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மாற்று திறனாளிகள் சங்கத்தினர் அனைவரும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.