பல்லடம் அருகே அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை எடுத்த காரணம்பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கே சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளி செயல்பட்டு வந்தது. அப்பொழுது பள்ளியில் இரு மாணவிகள் மயங்கி கீழே விழுந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவிகளை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்களை சோதனை செய்த பொழுது அவர்கள் தண்ணீரில் எறும்பு மருந்து கலந்து குடித்தது தெரியவந்தது.
இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது வீட்டில் பெற்றோர்கள் சண்டையிட்டு கொண்டதால் தனது வாட்டர் பாட்டிலில் தண்ணீரில் எறும்பு மருந்தை கலக்கி பள்ளிக்கு கொண்டு வந்து குடிப்பதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த மாணவியின் அருகில் அமர்ந்திருந்த மாணவி அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் அருந்தி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த விஷப்பாட்டில் கொண்டு வந்த மாணவி பாட்டிலை பிடுங்கி மீதி தண்ணீரை அருந்தி உள்ளார். இதனை அடுத்து இருவரும் மயக்கம் அடைந்தது தெரியவந்தது.
விஷம் அருந்திய இரு மாணவிகளுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.
தாய் தந்தை சண்டையிட்டு கொண்டதற்காக பள்ளி மாணவி பள்ளியில் விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.