தமிழிசையின் ZOOM மீட்டிங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. அருவருக்கத்தக்க செயல் : வைரலாகும் வீடியோ!
தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இன்று Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடி கொண்டிருக்கும்போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை Zoom மீட்டிங்கில் பரவவிட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்’’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் தமிழிசை சவுந்தராஜன் பேசும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் தமிழிசை சவுந்தரராஜன் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
அதில் வணக்கம், முதலில் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நான் உங்களுடன் Zoom மீட்டிங் மூலம் தொடர்பு கொள்ள முடிவு செய்தேன்.
ஏனென்றால் நான் தென்சென்னை தொகுதியில் அனைத்து இடங்களுக்கும் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன். ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் எனது நண்பர்களை (பொதுமக்கள்) என்னால் சந்திக்க முடியவில்லை. இதனால் நான் உங்களுடன் Zoom மீட்டிங் மூலம் தொடர்பு கொள்ள நினைத்தேன்.
அதன்படியே Zoom மீட்டிங்கில் உங்களுடன் நான் இணைந்தேன். தாமரை சின்னத்தில் ஓட்டளித்து எம்பியாக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மீட்டிங்கை முன்னெடுத்து செல்ல முடியவில்லை.
ஆனால் சில விஷமிகள், எதிரிகள் தலையிட்டு உங்களையும், என்னையும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் தவறான செயலில் ஈடுபட்டுள்ளனர். இது நமக்கு இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான உறவை பிரிக்காது. நன்கு படித்த, நேர்மையான நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான் அரசியல் என்பது சுத்தமாகும்.
இதனால் தயவுசெய்து தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள். இன்னொரு நேரத்தில் விஷமிகள் தலையிடு இன்றி நாம் மீட்டிங்கை கனெக்ட் செய்வோம்.
அதன்மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும், தென்சென்னையின் வளர்ச்சிக்கும் ஒன்றாக இணைவோம். உங்களின் சின்னம் தாமரை. லோக்சபா தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களித்து எனக்கு ஆதரவு தாருங்கள் என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.