தமிழகம்

காவல் நிலையத்துக்கு வந்த 2 பேர் மரணம்.. விசாரணையில் ஷாக்.. திருச்செந்தூரில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்திற்குள் இன்று காலையில் ஆண் பெண் இருவர் பூச்சிமருந்தை குடித்து விட்டோம் என்று கூறி காவல்நிலையத்திற்குள் இருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள குலசேகரன்பட்டினம் சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருவரும் ஒரே காரில் வந்துள்ளனர். இந்த கார் குலசேகரன்பட்டினம் காவல்நிலையம் அருகே நின்றது.

தொடர்ந்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இறந்த ஆண் நபர் திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மகன் தங்கம் (40) என்பது தெரியவந்தது. லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி கஸ்தூரி தேவி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது.

அதேபோல் அவருடன் வந்து இறந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுப்பையா என்பவரின் மனைவி பார்வதி (28) என்றும் அவருக்கும் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து என்ன காரணத்திற்காக இவர்கள் பூச்சி மருந்து குடித்தார்கள்? எங்கு குடித்தார்கள்? என்ன காரணத்திற்காக குலசேகரன்பட்டினம் வந்தார்கள்? என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இவர்களை காணாமல் இரு குடும்பத்தினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்காதல் விவகாரத்தில் இருவர் பூச்சிமருந்து குடித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.