இன்றைய காலக்கட்டங்களில் காதல் திருமணங்கள் சாதாரணமாகிவிட்டன. சில திருமணங்கள் பெற்றோரை எதிர்த்து நடக்கும், மற்றவை பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெறும். ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளாத சில பெற்றோர் காலப்போக்கில் சமரசம் செய்துகொள்வார்கள்.
ஆனால் சில பெற்றோர் கௌரவம்தான் முக்கியம் என்று கருதி கொலை செய்யவும் தயங்குவதில்லை. அதேபோன்ற ஒரு சம்பவம் கீசராவில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் கீசரா பகுதியில் நர்சம்பள்ளி கிராமத்தில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா என்பவர் பிரவீண் என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் தங்களுக்குப் பிடிக்காததால் ஸ்வேதாவின் பெற்றோர், பால நரசிம்மா மற்றும் மகேஸ்வரி ஆகியோர், மகள் மீது கோபம் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலையில், பிரவீண் வீட்டிற்குச் சென்று உறவினர்களின் உதவியுடன் ஸ்வேதாவைக் கடத்திச் சென்றனர். பிரவீண் மற்றும் ஸ்வேதா இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதிகாலையில் பிரவீண் வீட்டின் மீது ஸ்வேதாவின் பெற்றோர் தாக்குதல் நடத்தினர்.
ஸ்வேதாவின் கண்களில் மிளகாய்பொடியை தூவி, துணியால் கட்டித் தூக்கிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து கணவர் பிரவீண் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரவீண் அளித்த புகாரின் பேரில், ஸ்வேதாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிசிடிவி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.