Categories: தமிழகம்

போலீசாரை தாக்கி தப்பியோடிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு : சிகிச்சை பலனின்றி பலி.. நெல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

போலீசாரை தாக்கி தப்பியோடிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு : சிகிச்சை பலனின்றி பலி.. நெல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளான்குளியில் சாலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.அங்கு கடந்த 7-ம் தேதி அன்று, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் சாலையில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து தகராறு செய்தனர். அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் வழிமறித்தனர்.

இதையடுத்து அங்கு சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளியான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உடையநாதபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் கருப்பசாமி (வயது 42) மர்மநபர்களை கண்டித்து, பஸ்சுக்கு வழிவிடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் அரிவாளால் கருப்பசாமியை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற மூலச்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரையும் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி, முக்கூடல் ரோட்டில் தப்பி சென்றனர். இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள், அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பிய மர்மநபர்களை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, முக்கூடல் அருகே திருப்புடைமருதூரில் சென்ற அரசு பஸ்சை வழிமறித்த 2 மர்மநபர்களும், பஸ்சின் முன்பக்க கண்ணாடிகளை அரிவாளால் உடைத்தனர். சிறிதுநேரத்தில் அந்த வழியாக வந்த போலீசார், மர்மநபர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸ் ஏட்டு செந்தில்குமாரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு, அருகில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் தப்பி ஓடினர்.

உடனே போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மர்மநபர்களில் ஒருவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. மற்றொருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், முக்கூடல் அருகே தென்திருப்புவனத்தைச் சேர்ந்த காளி மகன் பேச்சிதுரை (23), கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சந்துரு (23) என்பது தெரியவந்தது.

அரிவாள் வெட்டில் காயமடைந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பேச்சிதுரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடியபோது துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேச்சிதுரை சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

பேச்சித்துரை உயிரிழப்பை தொடர்ந்து, நெல்லையில் வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.