போட்டி நடக்கும் ஒரு சில மணி நேரங்களுக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் நான்கு நாள் டெஸ்ட் தொடர் நேற்று இரண்டாவது போட்டியுடன் தொடங்கியது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் திடீரென தொடரிலிருந்து விலகியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வாகும் வாய்ப்பு நிச்சயம் என சொல்லப்பட்ட நிலையில், இப்படியான முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஐயர், முன்பு முதுகு காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார். நீண்ட நேரம் மைதானத்தில் நின்று விளையாட முடியாத சூழ்நிலையால், இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அவர், இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் நேரடியாக தெரிவித்துவிட்டு, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தேர்விலும் தன்னை சேர்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.