அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை முறையாக விசாரிக்காததாக பெண் எஸ்ஐ ராஜி கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில், பாலியல் வன்கொடுமை அளித்த நபர் குறித்து புகார் அளிக்கச் சென்ற தங்களை, போலீசார் தரக்குறைவாக நடத்தியதாக சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டனர். பின்னர், இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில், சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதேநேரம், வெளிமாநில ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான புலனாய்வுக் குழு, குற்றம் சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் ஆகியோரைக் கைது செய்தது.
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக முறையான விசாரணை நடத்தவில்லை என்ற புகாரில் பெண் காவல் ஆய்வாளர் ராஜியை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. இதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அதிமுக வட்டச் செயலாளராக இருந்த சுதாகரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், இந்த வழக்கில் சுதாகருக்கு என்ன தொடர்பு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்ற சிறுமியின் தாயாரிடம் சுதாகர் கட்டப்பஞ்சாயத்து செய்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
அதாவது, கைது செய்யப்பட்ட சதீஷ் என்பவரது பெயரை வழக்கிலிருந்து விடுவிக்க, அவரிடம் இருந்து பணம் பெற்றுத் தருவதாக குழந்தையின் தாயாரிடம் சுதாகர் கட்டப்பஞ்சாயத்து செய்ததை சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சதீஷுக்கு ஆதரவாக இருந்து, அவர் தலைமறைவாக இருக்க சுதாகர் அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.