தமிழகம்

எஸ்ஐ, 3 ஐடி அதிகாரிகள் அதிரடி கைது.. ரூ.20 லட்சம் வழிப்பறியில் சிக்கியது எப்படி?

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த எஸ்ஐ மற்றும் 3 ஐடி அதிகாரிகளை சென்னை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளனர். அப்போது, முகமது கௌஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல், அவர் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து உள்ளார். இந்த நிலையில், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் என்பவர், முகமது கெளஸை நிறுத்தி உள்ளார்.

தொடர்ந்து, அவரிடம் எங்கு செல்கிறாய் என விசாரணை நடத்தி உள்ளார். அப்போது, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் பணத்தோடு செல்வதாக முகமது கெளஸ் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்ஐ ராஜாசிங் கைப்பற்றி உள்ளார்.

அதேநேரம், அளவுக்கதிமான பணத்தைக் கைப்பற்றியது தொடர்பாக ராஜாசிங், முறைப்படி உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருந்துள்ளார். ஆனால், இதனை தனக்குத் தெரிந்த மூன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளார். எனவே, நான்கு பேரும் தலா 5 லட்சம் ரூபாய் என 20 லட்சத்தைக் பங்கிட்டு கொண்டனர்.

இதையும் படிங்க: அதிகாலையில் மனைவி செய்த காரியம்.. பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கிடந்த கணவர்.. அரியலூரில் என்ன நடந்தது?

இதனிடையே, எஸ்ஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேரும் சேர்ந்து முகமது கெளஸை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட கெளஸ், இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார். இதன்படி, கூட்டு வழிப்பறி என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், திருவல்லிக்கேணி எஸ்ஐ ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப் மற்றும் பிரபு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து, கைதான 4 பேரிடமும் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.