சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த எஸ்ஐ மற்றும் 3 ஐடி அதிகாரிகளை சென்னை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளனர். அப்போது, முகமது கௌஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல், அவர் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து உள்ளார். இந்த நிலையில், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் என்பவர், முகமது கெளஸை நிறுத்தி உள்ளார்.
தொடர்ந்து, அவரிடம் எங்கு செல்கிறாய் என விசாரணை நடத்தி உள்ளார். அப்போது, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் பணத்தோடு செல்வதாக முகமது கெளஸ் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்ஐ ராஜாசிங் கைப்பற்றி உள்ளார்.
அதேநேரம், அளவுக்கதிமான பணத்தைக் கைப்பற்றியது தொடர்பாக ராஜாசிங், முறைப்படி உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருந்துள்ளார். ஆனால், இதனை தனக்குத் தெரிந்த மூன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளார். எனவே, நான்கு பேரும் தலா 5 லட்சம் ரூபாய் என 20 லட்சத்தைக் பங்கிட்டு கொண்டனர்.
இதையும் படிங்க: அதிகாலையில் மனைவி செய்த காரியம்.. பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கிடந்த கணவர்.. அரியலூரில் என்ன நடந்தது?
இதனிடையே, எஸ்ஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேரும் சேர்ந்து முகமது கெளஸை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட கெளஸ், இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார். இதன்படி, கூட்டு வழிப்பறி என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், திருவல்லிக்கேணி எஸ்ஐ ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப் மற்றும் பிரபு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து, கைதான 4 பேரிடமும் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.