தமிழகம்

எஸ்ஐ, 3 ஐடி அதிகாரிகள் அதிரடி கைது.. ரூ.20 லட்சம் வழிப்பறியில் சிக்கியது எப்படி?

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த எஸ்ஐ மற்றும் 3 ஐடி அதிகாரிகளை சென்னை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளனர். அப்போது, முகமது கௌஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல், அவர் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து உள்ளார். இந்த நிலையில், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் என்பவர், முகமது கெளஸை நிறுத்தி உள்ளார்.

தொடர்ந்து, அவரிடம் எங்கு செல்கிறாய் என விசாரணை நடத்தி உள்ளார். அப்போது, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் பணத்தோடு செல்வதாக முகமது கெளஸ் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்ஐ ராஜாசிங் கைப்பற்றி உள்ளார்.

அதேநேரம், அளவுக்கதிமான பணத்தைக் கைப்பற்றியது தொடர்பாக ராஜாசிங், முறைப்படி உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருந்துள்ளார். ஆனால், இதனை தனக்குத் தெரிந்த மூன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளார். எனவே, நான்கு பேரும் தலா 5 லட்சம் ரூபாய் என 20 லட்சத்தைக் பங்கிட்டு கொண்டனர்.

இதையும் படிங்க: அதிகாலையில் மனைவி செய்த காரியம்.. பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கிடந்த கணவர்.. அரியலூரில் என்ன நடந்தது?

இதனிடையே, எஸ்ஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேரும் சேர்ந்து முகமது கெளஸை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட கெளஸ், இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார். இதன்படி, கூட்டு வழிப்பறி என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், திருவல்லிக்கேணி எஸ்ஐ ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப் மற்றும் பிரபு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து, கைதான 4 பேரிடமும் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

30 minutes ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

31 minutes ago

மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…

49 minutes ago

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

1 hour ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

2 hours ago

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

17 hours ago

This website uses cookies.