குளத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலியல் புகாரில் சிக்கிய விவகாரத்தில் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளராகவும் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருபவர் ஆனந்த தாண்டவம். இவர் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது, அங்கு புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது அந்தப் பெண் மதுரை ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே அந்தப் பெண் கொடுத்த புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில், அது உண்மை எனத் தெரியவந்தது. இது தொடர்பாக தென் மண்டல ஐஜி-யிடம் விசாரணை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் பெயரில் குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை சஸ்பெண்ட் செய்ய தென் மண்டல ஐஜி உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.