விழுப்புரம் : நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் அனைத்து வீடுகளுக்கும் சென்று வித்தியாசமான முறையில் உறுதிமொழிப் பத்திரத்தை கொடுத்து வாக்கு சேகரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது இதனையொட்டி இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 41வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார் என்பவர் இதுவரை அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்து அந்தப் பகுதிக்கு செய்த காரியங்களை படத்துடன் புத்தகம் வெளியிட்டு அதனை வாக்காளர் வீடுகளுக்குச் சென்று கொடுப்பதுடன் 20 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழி உடன் கையொப்பமிட்டு கொடுத்து வருகின்றார்.
இதுவரை ஒவ்வொரு வேட்பாளரும் இனிமேல் செய்யப்போகும் காரியங்களை செய்வதாக கூறி மட்டுமே வாக்குகள் கேட்பார்கள். ஆனால் வித்தியாசமான முறையில் செய்ததை சுட்டிக்காட்டியும் இனிமேல் செய்யப் போவதையும் புத்தகமாக வெளியிட்டு உறுதிமொழி பத்திரத்துடன் வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்கு சேகரிப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
This website uses cookies.