Categories: தமிழகம்

மயக்க ஊசிக்கு மயங்காத கருப்பனின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம் : 2 பேரை கொன்ற ஒற்றை யானை தோட்டத்தில் புகுந்ததால் பதற்றம்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது உணவு தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 1 வருடம் முன்பு தாளவாடி மற்றும் ஜீரகள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

அதேபோல விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது.

கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வந்தது. யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகியுள்ளது

அதைத் தொடர்ந்து பொள்ளாச்சி டாப்சிலிப் இருந்து கும்கி யானைகள் உதவியுடன் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவுசெய்தனர்.

மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத கருப்பன் யானை வனப்பகுதியில் தப்பி சென்றது. இதனால் யானையை பிடிக்கும் முயற்சி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உப்பட்ட ஜோரைகாடு, பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் நேற்று முன் தினம் இரவு கருப்பன் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.யானையை விரட்டும் முயச்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர் ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்தது.

பின்னர் அதிகாலையில் யானை தானாக வனப்பகுதியில் சென்றது. யானையால் 1 ஏக்கர் கரும்பு, முட்டைகோஷ், பீட்ரூட் பயிர்கள் சேதாரம் ஆனாது சேதாரம் ஆனா பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் யானையை விரட்ட நடவடிக்கை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஹீரோயின் மெட்டீரியல்… எப்படி தமிழ் சினிமா மிஸ் பண்ணுச்சு : நித்யஸ்ரீ Cute Video!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…

19 minutes ago

இயற்கைக்கு நேரான உடலுறவில் தான் இருக்கிறேன்.. முகம் சுழிக்க வைத்த ஓவியா!

தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…

39 minutes ago

மூதாட்டியின் கழுத்தை அறுத்த பேரன்… கோவையை அலற விட்ட பகீர் சம்பவம்!

கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…

58 minutes ago

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

16 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

17 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

17 hours ago

This website uses cookies.