தமிழகம்

இறந்த தாயுடன் 9 நாட்களைக் கழித்த சகோதரிகள்.. அதிர்ச்சி காரணம்!

ஹைதராபாத்தில், இறந்த தாய்க்கு இறுதிச் சடங்குகள் செய்ய பணமில்லாததால் 9 நாட்கள் வீட்டிலே இருந்த சகோதரிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜு. இவருக்கும், லலிதா (45) என்பவருக்கும் கடந்த 26 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ரவளிகா (24) மற்றும் யஷ்வதா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இதனிடையே, கடந்த 2020ஆம் ஆண்டில் ராஜுவுக்கும், லலிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, லலிதா தனது வயதான தாய் மற்றும் மகள்களுடன் செகந்திராபாத் புத்தா நகரில் வசித்து வந்துள்ளார். மேலும், மூத்த மகள் துணிக்கடையிலும், இளைய மகள் தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, இந்த இரு மகள்களின் வருமானத்தில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், லலிதாவின் தாய் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். மேலும், 3 மாதங்கள் வரை வீட்டு வாடகை கட்டாததால் வீட்டை காலி செய்ய, அதன் உரிமையாளர் வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 22ஆம் லலிதா உயிரிழந்துள்ளார். ஆனால், கையில் இறுதிச் சடங்குகள் செய்யக்கூட அவர்களிடம் பணமில்லை. இதனால், கடந்த ஒருவாரமாக பட்டினியாகவே இறந்த தாயுடன் இருந்துள்ளனர். பின்னர், ஒரு வாரம் கடந்த நிலையில், மகள்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதையும் படிங்க: சொந்த சகோதரி மீது அலாதி காதல்.. 2 வயது குழந்தையைக் கொன்ற கொடூர அண்ணன்!

ஆனாலும், அவர்கள் இறக்கவில்லை. இதனையடுத்து, நேற்று காலை வீட்டின் கதவை திறந்து வெளியே வந்த இருவரும், பக்கத்து வீட்டாரிடம் நடந்த விஷயங்களைக் கூறி அழுதுள்ளனர். இதனையடுத்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சம்பவ இடத்துக்கு வந்த செகந்திராபாத் போலீசார், லலிதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்றுள்ள 2 மகள்களையும் சிகிச்சைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

37 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

4 hours ago

This website uses cookies.